தமிழ் சினிமாவை தாக்க வரும் உக்ரைன் ஏவுகனை.! - சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நடிகை ஒப்பந்தம்.!!

உக்ரைன் நாட்டை சேர்ந்த மாடல் அழகியும், நடிகையுமான மரியா ரியாபோஷாப்கா சிவகார்திகேயனின் எஸ்.கே.20 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சிவகார்த்திகேயன் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு 'எஸ்.கே 20' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த நிலையில் எஸ்.கே 20 படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் 'எஸ்.கே 20' படத்தில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மாடல் அழகியும், நடிகையுமான மரியா ரியாபோஷாப்கா நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இவர் ஹாட்ஸ்டாரில் வெளியான 'ஸ்பெஷல் ஆப்ஸ்' இந்தி வெப் தொடரில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அந்த அறிவிப்பை பகிர்ந்து மரியா ரியாபோஷாப்காவிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். 

நேட்டோ அமைப்பில் சேரக்கூடாது என உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து தாக்குதல் தொடுத்து வரும் நிலையில், உக்ரைன் சினிமா  நட்சத்திரம் ஒன்று தமிழ்த் திரையுலகை தாக்க கிளம்பியுள்ளது, முன்னனி நடிகர் நடிகைகளை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post