சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.


கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோழி தீவன மூலப்பொருள்கள் ஏற்றிக்கொண்டு திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை சென்றுகொண்டிருந்த TN59 CE 2775 பாக்ஸ் டைப் லாரி பிரேக் பிடிக்காமல் 6வது கொண்டை ஊசி வளைவு அருகே தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து குள்ளானது. லாரி ஓட்டுனரான மதுரையை சேர்ந்த தமிமுன் அன்சாரி என்பவர் காயமடைந்து சத்தி அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். வாகன போக்குவரத்து தடையின்றி வாகனங்கள் சென்றுவருகிறது. .

Previous Post Next Post