தேனி மாவட்டத்தில் போக்குவரத்து போலீசாருக்கு பழச்சாறு மாவட்ட சூப்பிரண்டு வழங்கினார்.


செய்தியாளர் ரா.சிவபாலன்.

தேனி,15

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகின்றது, வெயிலின் தாக்கத்தை பொருட்படுத்தாமல்  போக்குவரத்து போலீசார் பணி செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த கோடைகாலத்தில் போக்குவரத்து போலீசாருக்கு பழச்சாறு கொடுக்கப்பட்டு வருகிறது,

அதன்படி  இந்த ஆண்டு பழச்சாறு வழங்கும் பணியை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, தேனி பழைய பேருந்து நேரு சிக்னல் பகுதியில் பணியாற்றி வரும் போக்குவரத்து போலீசாருக்கு பழச்சாறு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.வரும் ஜூன் மாதம் இறுதிவரை  மாவட்டத்தில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு பகல் நேரத்தில் பழச்சாறு வழங்குமாறு அனைத்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர்களுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

Previous Post Next Post