புற்றுநோய் பரிசோதனை தொடர்பான மருத்துவ முகாம் - மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ துவக்கி வைத்தார்.!


தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட  55 வார்டு  அத்திமரப்பட்டி பகுதியில் நடைபெற்ற தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவ மாணவியரின் நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் புற்றுநோய் பரிசோதனை தொடர்பான மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ துவக்கி வைத்து வருகை தந்திருந்த பொதுமக்களிடையே விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். 

மேற்படி நிகழ்வில் சுகாதார அலுவலர் ராஜபாண்டி, பேராசிரியை கலையரசி , மாமன்ற உறுப்பினர் ராஜதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post