அமைப்பு தேர்தல் -முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் முன்னிலையில் கட்சிநிர்வாகிகள் மனுக்களை அளித்தனர்

திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக அமைப்பு தேர்தல் பல்லடம் ராயர்பாளையத்தில் தேர்தல் ஆனையர்களான முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் எம்.பி., திருத்தணி கோ.ஹரி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் முன்னிலையில் கட்சிநிர்வாகிகள் நகர, ஒன்றிய, கிளைக்கழக பதவிகளுக்கு மனுக்களை அளித்தார்கள். முன்னாள் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் உள்பட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post