முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை.!*


கோவையில் உள்ள வீடு உட்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான நிறுவனங்கள், அவருக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் அதிமுகவினர் இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் மட்டும் 35க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாத  முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீடு உட்பட 60 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், 

தற்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு. கேரளாவில் உள்ள உறவினர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்

Previous Post Next Post