தூத்துக்குடி கடற்கரையில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம் - கொலையாளி குறித்து போலீஸ் விசாரணை.!

தூத்துக்குடி சிலுவைப்பட்டி கடற்கரையில் கழுத்து, கை, நெத்தியில் ரத்தக் காயங்களுடன் கிடந்த வாலிபரின் சடலத்தை மீட்டு போலீசார் கொலையா? , விபத்தா? என விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி தாளமுத்துநகர் சிலுவைபட்டி கடற்கரையில் ரத்தக் காயங்களுடன் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், டிஎஸ்பி கணேஷ், தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை உடலை மீட்டு  பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இறந்து கடந்த நபரின் கழுத்து, கை, நெத்தியில் ரத்த காயம் இருந்துள்ளது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. அவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? கொலையாளிகள் யார்? என்பது குறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post