விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம்.!


2020-2021-ல் பிரிமியம் தொகை செலுத்திய விவசாயிகளுக்கு, அனைத்து பயிர்களுக்கும் பாகுபாடின்றி பயிர்க்காப்பீடு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

பயிர் காப்பீடு செய்த அனைத்து கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பாகுபாடின்றி அனைத்து பயிர் வகைகளும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும். 2020-21-ம் ஆண்டில் விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் 

மக்காச்சோளம், உளுந்து, பாசி போன்ற பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு 

விவசாயிகள் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நல்லையா ஆகியோர் தலைமை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர்கள் பாலமுருகன்,அழகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஓட்டப்பிடாரம் தாலுகா செயலாளர் ஏ.அசோக்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர்கள் ஏ.லெனின் குமார், வி.கிருஷ்ணமூர்த்தி. தாலுகா தலைவர்கள் சிவராமன், பி.கிருஷ்ணமூர்த்தி, சந்திரமோகன், 

தாலுகா செயலாளர் வேலாயுதம், எட்டயபுரம் பால்பண்ணை தலைவர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கி கோட்டாட்சியர் சங்கரநாராயணனிடம் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி மனு வழங்கினர்.

Previous Post Next Post