நகராட்சி பேரூராட்சி ஊராட்சி பிரதிநிதிகளுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி வகுப்பு-மாவட்ட கலெக்டர் புத்தகத்தை வெளியிட்டார்

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட தனியார் உணவகத்தில் நேற்று நடைபெற்ற நகராட்சி பேரூராட்சி ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஊராட்சி மக்கள் பிரதிநிதிகளான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி வகுப்பில் மாவட்ட கலெக்டர் க.வீ.முரளீதரன், மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கையேட்டியினை வெளியிட்டார்.

உடன் மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரிதாநடேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, வேளாண்மை துறை இயக்குனர் அழகேந்திரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜாராஜேஸ்வரி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Attachments area
Previous Post Next Post