சத்தியமங்கலத்தில் தொழிற் சங்கங்களின் சார்பில் சாலை மறியல்-போக்குவரத்து ஸ்தம்பிப்பு

மத்திய அரசை கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தியும்,, அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் நடைபெற்ற நாடுதழுவிய பொது வேலை நிறுத்தத்தை ஒட்டி, சத்திய மங்கலத்தில் பேருந்து நிலையம் அருகே சிஐடியூ மற்றும் ஏஐடியூசி தொழிற் சங்கங்களின் சார் பில், சாலைமறியல்போராட்டம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து சிறிது நேரம் ஸ்தம்பித்தது.
சத்தி டிஎஸ்பி ஜெயபாலன் மற்றும் காவல் ஆய்வாளர் நெப்போலியன் தலைமையில்சத்தியமங்கலம் காவல் துறை யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர். முன்னதாக, தொழிற்சங்கத் தினர் நகராட்சி அலுவலகம் முன்பிருந்து மத்திய அரசுக்கு ஏதிராக கோஷங்கள் எழுப்பி, ஊர்வலமாக வந்து, சத்தி பேருந்து நிலையம் அருகே சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.
Previous Post Next Post