மாணவர்களுடன் தரையில் அமர்ந்து சத்துணவு சாப்பிட்ட மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்.! - மாணவர்களுடன் கலந்துரையாடி குறைகள் கேட்பு.!


தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் பசுவந்தனை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், மாணவ, மாணவிகளுடன் ஒன்றாக அமர்ந்து சத்துணவு சாப்பிட்டு அவர்களோடு இன்று (18.03.2022 கலந்துரையாடினார்.

அப்போது அங்கு பயிலும் 180 மாணவ, மாணவிகளிடம் அவர்களின் படிப்பு மற்றும் சத்துணவின் தரம் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார். "நான் முதல்வன்" திட்டத்தின்படி மாணவர்கள் தங்களின் தனிப்பட்ட கோரிக்கைகள், பிற கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் தலைமையாசிரியர் மூலம் எழுதி எனக்கு அனுப்புங்கள் அதன்மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். குறிப்பாக ஊரில் உள்ள பொதுப் பிரச்சனைகளாக இருந்தாலும் சரி, வேறு எந்த வகையான பிரச்சனைகளாக இருந்தாலும் எழுத்து மூலமாக எழுதிவிடுங்கள். தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என மாணவர்களிடம் உறுதியளித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் பசுவந்தனை பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், அரசு மேல்நிலைப்பள்ளி, கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பசுவந்தனையில் கிராம நிர்வாக அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை பார்வையிட்டு அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு உத்தரவிட்டார். 

தொடர்ந்து, அரசு அனுமதி பெற்ற பின்பும் அகற்றப்படாமல் உள்ள தாய்சேய் விடுதி உட்பட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, துணை சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள், பசுவந்தனையில் உள்ள நியாய விலைக்கடையில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் இருப்ப குறித்த பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து பசுவந்தனை அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் தெப்பக்குளத்தினை பார்வையிட்டு புனரமைப்பு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆனயரிடம் கேட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். மேலும் பசுவந்தனை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு செய்து 100 நாள் வேலை திட்ட பதிவேடுகள், வருகை பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் நிஷாந்தினி, துணை வட்டாட்சியர் ஆனந்த், வட்ட வழங்கல் அலுவலர் அறிவழகன், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

பசுவந்தனை ஊராட்சி மன்ற தலைவர் லெட்சுமி சிதம்பரம், பசுவந்தனை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நாயகம், சத்துணவு அமைப்பளார்கள் மீனா, தாமரைசெல்வி, சங்கரேஸ்வரி, சத்துணவு உதவியாளர் சிதம்பரம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post