தாளவாடி அருகே விவசாய தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்: விவசாயிகள் வேதனை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகதுக்கு உட்பட்டது ஜீரகள்ளி வனச்சரகம்.இந்த வனச்சரகதுக்கு உட்பட்ட பசப்பன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி.இவர் தன்னுடைய 10 ஏக்கர் தோட்டத்தில் தென்னை,கரும்பு விவசாயம் செய்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று  வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் கருப்பசாமியின் தோட்டத்துக்குள் புகுந்து விவசாய பயிர்களை மிதித்தும்,தின்றும் சேதம் செய்தது.மேலும்தண்ணீர் குழாய்களையும்,மின் மோட்டார்களையும்,மின் இணைப்புக்காக கொடுக்கப்பட்டிருந்த மின்சார ஒயர்களையும்சேதம் செய்தது. இதனை கண்ட விவசாயிகள் பட்டாசுகளை வெடித்து யானையை விரட்ட முயன்றனர்.இதனால்  அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறும் போது" யானைகள் தின்று சேதம் செய்தவைகளுக்கு அரசு இழப்பீட்டு தொகை  வழங்க வேண்டும்.மேலும் வனப்பகுதியை ஒட்டி ஆழமான அகழி தோண்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்றனர்.



Attachments area


Previous Post Next Post