சேலம் ஜங்ஷன் ஜாகிர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமம் 9 ஆம் படை வீடு மஹா கும்பாபிஷேக விழா

சேலம் ஜாகிர் அம்மாபாளையம் ஸ்ரீ காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் சேலத்தில் முதல் முறையாக 7 நிலை கருங்கல் ராஜகோபுரம் மற்றும் நூதன விமானங்கள் அமைத்து 164 ஹோம குண்டங்கள் அமைத்து உலகத்தில் முதல் முறையாக 6 கால யாக பூஜையுடன் 108 லட்சுமிகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. 03.04.2022 அன்று அதிகாலை முதல் தொடங்கி தீர்த்தக்குடம் புறப்பாடுடன் தொடங்கி முதல் யாகசாலை, 04.04.2022,05.04.2022, 06.04.2022 புதன் கிழமை 6 கால யாக பூஜைகள் நிறைவுபெற்று காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் மேஷ லக்னத்தில் உலகத்தில் முதல் முறையாக 164 ஹோம குண்டங்களில் 200 வேத விற்பன்னர்களால் 6 கால யாக பூஜையுடன் மஹா கும்பாபிஷேக விழா ஒன்பதாம் படை வீட்டில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
காலை 7 மணிக்கு அண்ணக் கொடியேற்றி காலை 7 மணி முதல் இரவு 7 மணி இடைவிடாது அன்னதானங்கள் வழங்கப்படுகிறது. பகல் 12 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ காவடி பழனியாண்டவருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றும்.இரவு 7 மணிக்கு தங்க ரதத்தில் உற்சவர் புறப்பாடு நடைபெறுகிறது. பொதுமக்கள் அனைவரும் திறளாக வந்து கலந்து கொண்டு ஸ்ரீ முருகப் பெருமானின் திருவருளைப் பெற்று செல்லுமாறு பக்தர்களுக்கு ஆசிரமத்தின் நிர்வாகி அருள்வாக்கு எஸ்.சோமசுந்தரம் செல்வி மற்றும் விழா குழுவினர் சார்பாக தகவல் தெரிவித்தனர்.
Previous Post Next Post