ஜப்பானில் புகுஷிமா அருகே 7.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் -கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை


ஜப்பானில் வடகிழக்கு கடற்கரையில் புகுஷிமா அருகே 7.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  நிலநடுக்கத்தை அடுத்து கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரண்டு நிமிடங்களுக்கு மேல் நீடித்த இந்த நடுக்கம் டோக்கியோ வரை உணரப்பட்டது.


ஜப்பானின் டோக்கியோவில் உள்ள தோஷிமா வார்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு அப்பகுதியில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் 20 லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

Previous Post Next Post