திருமணமான 5 மாதங்களிலேயே மனைவியை வெட்டி படுகொலை செய்த கணவர்.! மாமியாருக்கு கையில் வெட்டு கணவன் தப்பி ஓட்டம்.!*


தூத்துக்குடி, தாளமுத்துநகர், பாலதண்டாயுத நகரை சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு முதல் மனைவி இறந்து விட்டார். இதையடுத்து மாரியம்மாள் என்ற பெண்ணை  2வது தாக திருமணம் செய்துகொண்டார். 

இந்த தம்பதியரின் மகள் மாரிச்செல்வி (19). இவருக்கும் தூத்துக்குடி அண்ணா நகர் 10வது தெரு சேர்ந்த ரவி மகன் பொன்ராஜ் (27) என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நட்நதது. பொன்ராஜ் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். 


மாரிச்செல்வி அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டே இருந்திருக்கிறார். இதை அவரது கணவர் பொன்ராஜ் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், நேற்று இரவு பொன்ராஜ் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மனைவி வீட்டுக்கு சென்று திடீரென மனைவியை சராமாரியாக வெட்டியுள்ளார். இதனை தடுக்க முயன்ற அவரது மாமியாரையும் கையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். 


இதில் மாரிச் செல்வி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். 

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட மாரிசெல்வி உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயம் அடைந்த தாயார் மாரியம்மாள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தூத்துக்குடி நகர காவல் கண்காணிப்பாளர் கணேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மாரி செல்விக்கு திருமணமாகி 5 மாதங்களே ஆகி உள்ள நிலையில் கொலை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது இந்த கொலை தொடர்பாக பாென்ராஜ் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post