5 கோடி ரூபாய் மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்தது தொடர்பான புகார் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஆஜர்.!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறையிலிருந்து நிபந்தனை பிணையில் வெளிவந்துள்ளார். அதன்படி, திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த அவர் மீது மேலும் ஒரு மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்தது தொடர்பான புகாரின் பேரில் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அது தொடர்பான வழக்கில் இன்று  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன்பு ஆஜரானார்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post