தூத்துக்குடியில் கொலை மிரட்டலில் ஈடுபட்ட 4 பேர் கைது.!


தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ரபி சுஜின் ஜோஸ் தலைமையில் உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 

தூத்துக்குடி 1வது ரயில்வே கேட் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் 

தூத்துக்குடி துரைசிங் நகரைச் சேர்ந்த சங்கிலிகருப்பன் மகன் விக்கி (எ) விக்னேஷ் (எ) விக்ரம் (22), தூத்துக்குடி தஸ்நேவிஸ் நகரைச் சேர்ந்த ஜான் சாமுவேல் மகன்கள் அந்தோணி ராஜ் (23), ஜேசுராஜ் (21) மற்றும் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த பாக்கியநாதன் மகன் முனீஸ்வரன் (24) ஆகியோர் என்பதும், 

அவர்கள் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் கொலை மிரட்டலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. உடனே மேற்படி தனிப்படையினர் எதிரிகள் விக்கி (எ) விக்னேஷ் (எ) விக்ரம், அந்தோணிராஜ், ஜேசுராஜ் மற்றும் முனிஸ்வரன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட எதிரிகளில் விக்கி (எ) விக்னேஷ் (எ) விக்ரம் என்பவர் மீது தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு உட்பட 3 வழக்குகளும், 

தூத்துக்குடி வடபாகம் காவல்நிலையத்தில் ஒரு கொள்ளை வழக்கும், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என மொத்தம் 5 வழக்குகளும், மற்றொரு எதிரியான அந்தோணிராஜ் என்பவர் மீது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post