இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.4.43 கோடி மதிப்பிலான வைரம் மற்றும் ரத்தினக் கற்கள் பறிமுதல்- சுங்கத்துறை விசாரணை.!*


இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த சரக்கு பாா்சலில் கடத்தி வரப்பட்ட ரூ.4.43 கோடி மதிப்புடைய வைரம்,ரத்தினக்கற்களை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனர்.

இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானத்தில் ஒரு பாா்சல் சென்னையில் உள்ள ஒரு நகை கடைக்கு வந்தது.


அதில் பெரிய அளவு வைரம்,ரத்தின கற்கள் கடத்தி வரப்படுவதாக சிறப்பு புலனாய்வு துறையிடமிருந்து சென்னை விமான நிலைய சுங்கத் துறைக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பாா்சலை டெலிவரி கொடுக்காமல் தடுத்து நிறுத்தினா்.அந்த பாா்சலை சோதனையிட்டனா்.

அதில் ரூ.5.85 லட்சம் மதிப்புடைய செமி வைரக்கற்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.ஆனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து பாா்சலை திறந்து பாா்த்து சோதனையிட்டனா்.


அந்த பாா்சலில் வைரக்கற்கள் 204 காரட் மற்றும் உயா் ரக ரத்தின கற்கள் இருப்பதை கண்டுப்பிடித்தனா்.

அவைகளின் மதிப்பு ரூ.4.43 கோடி என்பதை அதிகாரிகள் கண்டுப்பிடித்தனா். இதையடுத்து சுங்க அதிகாரிகள் வைரக்கற்களையும், உயா் ரக ரத்தினகற்களையும் பறிமுதல் செய்தனா்.

மேலும் இந்த பாா்சலை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த தொழில் அதிபரின் வங்கி கணக்கையும், அதிலிருந்த ரூ.60 லட்சம் பணத்தையும்  முடக்கினா்.அவருடைய நிறுவனத்தை சோதனையிட்டு ரூ.56 ஆயிரம் பணம் மற்றும் கணக்கு புத்தகங்களையும் கைப்பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Previous Post Next Post