சற்று நேரத்திற்கு முன்பு நெல்லை அருகே நடுக்கல்லூரில் லாரி மோதி 37 ஆடுகள் பலி


நெல்லையை அடுத்த நடுக்கல்லூர்  பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் இவர் இன்று காலை தனக்குச் சொந்தமான 100 ஆடுகளை கல்லூர் ரயில்வே கேட் அருகே மேய்ச்சலுக்காக நடத்தி சென்று கொண்டு இருந்தார். 


அப்போது அங்குள்ள திருப்பத்தில் ஆடுகள் சென்று கொண்டிருந்தபோது கல்லூர் சீதபற்பநல்லூர் சாலை திருப்பத்தில் கிரஷர் மணல் ஏற்றி அசுர வேகத்தில் வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் ஆடுகள் கூட்டத்தில் மீது பாய்ந்தது.


இதில் 37 ஆடுகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவலறிந்த சுத்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தலைமறைவான லாரி டிரைவரை போலீஸார் தேடி வருகின்றனர் ஆடுகள் கூட்டத்தில் லாரி மோதி 37 ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Previous Post Next Post