தமிழ்நாட்டில் 3500 கோடி ரூபாய் முதலீட்டில் 3 திட்டங்களுக்கான ஒப்பந்தம் - அபுதாபியில், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (28.3.2022) அபுதாபியில், லுலு நிறுவனம், தமிழ்நாட்டில் 3500 கோடி ரூபாய் முதலீடு செய்ய 3 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிகழ்வின்போது, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, லுலு குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் யூசுஃப் அலி, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன், இ.ஆ.ப., 

வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி பூஜா குல்கர்ணி, இ.ஆ.ப., அரசு உயர் அலுவலர்கள் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் நிறுவன உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post