பண்ணாரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை - 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது பண்ணாரி அம்மன் திருக்கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறும் வழக்கம்.

அதனையொட்டி இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 7ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பின்னர் 22ம் தேதி நடைபெற்ற குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதனை தொடர்ந்து  பண்ணாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு,  விளக்கிற்கு பூஜைகள் செய்து, அம்மனை துதித்து,அம்மன் துதி பாடல்கள் பாடி,மந்திரங்கள் ஓதி, பண்ணாரி அம்மனை வழிபட்டனர்.

Previous Post Next Post