டெய்லர் கொலை வழக்கு - கைதான 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.!

தூத்துக்குடியில் டெய்லர் கொலை வழக்கில் கைதான 2 வாலிபர்கள், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் பாலதண்டாயுதநகரை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருடைய மகன் கண்ணன் (49). இவர் தாளமுத்துநகர் மெயின் ரோட்டில் டெய்லர் கடை நடத்தி வந்தார். கடந்த 24.2.2022 அன்று அங்கு வந்த தாளமுத்துநகர் பாலதண்டாயுத நகரை சேர்ந்த தமிழரசன் மகன் ஜெயேந்திரன் (23), முத்துபாண்டி மகன் ரமேஷ் என்ற ரமேஷ் கண்ணன் (19) ஆகிய 2 பேரும் கண்ணனை கொலை செய்தனர். இதைத் தொடர்ந்து தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயேந்திரன், ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த 2 பேரையும் குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், ஜெயேந்திரன், ரமேஷ் ஆகியோரை கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி பாளையங்கோட்டை சிறையில் வழங்கினார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post