நெல்லை மாநகராட்சி 28 வது வார்டு பொதுமக்களுக்கு புதிய குடிநீர் இணைப்பு - கவுன்சிலர் சந்திரசேகர் தொடங்கிவைத்தார்

நெல்லை மாநகராட்சி 28வது வார்டு மாமன்ற உறுப்பினர் சந்திரசேகர் டவுண் அம்மன் சன்னதியில் உள்ள சாஸ்தா கோவில் அருகே பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று புதியகுடிநீர் குழாயை திறந்து வைத்தார். அப்போது அங்கிருந்த பெண்கள் எங்கள் பகுதியில் குடிநீர் இல்லாமல் வேறு தெருவிற்கு சென்று தண்ணீர் பிடிப்பதாகவும் இதனால் சிரமம் ஏற்பட்டதாகவும் தற்போது மாநகராட்சி தேர்தலில் 28 வது வார்டில் வெற்றி பெற்ற சந்திரசேகரிடம் தங்கள் பகுதியில் தண்ணீர் குழாய் வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும் இதனால் அவர் அப்பகுதியில் உடனடியாக தண்ணீர் குழாய் ஏற்படுத்தி கொடுத்தார் என்றும் அவருக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்வதாகாவும் அப்பகுதி பெண்கள் கூறினர். இந்நிகழ்ச்சியில் அதிமுக  நிர்வாகிகள் வட்ட செயலாளர் ஜெயச்சந்திரன், வட்ட பிரதிநிதி மார்க்கெட் சுந்தர், தலைமை கழக பேச்சாளர் கபாலி, சண்முகம் துணைச் செயலாளர் பிளம்பர், பரமசிவன், பேச்சியப்பன், வெங்கடேஷ், மணிகண்டன்,நெல்லை கிழக்கு பகுதி பொருளாளர் நெடுஞ்செழியன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




Attachments area
Previous Post Next Post