மார்ச் 27-முதல் தூத்துக்குடி - பெங்களுரு தினசரி விமான சேவை.! விமான நிலைய இயக்குநர் தகவல்.!


தூத்துக்குடி-பெங்களூரு இடையே தினசரி விமான சேவை வரும் மார்ச் 27 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தின் ஓடுபாதை 1,350 மீட்டராக உள்ள நிலையில், அதனை ரூ.380 கோடியில் 3,115 மீட்டராக மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும்  இதையடுத்து தூத்துக்குடி- பெங்களூரு இடையே வரும் மார்ச் 27 ஆம் தேதி முதல் தினசரி விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post