பட்டாசு ஆலை விபத்து - இறந்த 27 பேருக்கும் 20 லட்ச ரூபாய் தேசிய பசுமை தீர்ப்பாயம் மீண்டும் தீர்ப்பு.!


2021 ஏப்ரல் மாதம் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 27 தொழிலாளர்கள் உயிரிழந்ததில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ( என்ஜிடி) பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு, என்ஜிடி வழக்கை மறுபரிசீலனை செய்யுமாறு தீர்ப்பாயத்திற்கு உத்தரவிட்டது.

இதனையடுத்து உத்தரவை மறுபரிசீலனை செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம் அனைவருக்கும் 20 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டு தனது முந்தைய தீர்ப்பினை மீண்டும் உறுதிப்படுத்தியது தேசிய பசுமை தீர்ப்பாயம்

#NGT

Previous Post Next Post