தேசிய வாக்காளர் வழிப்புணர்வு போட்டிகள் 2022 : மார்ச் 31 வரை நீட்டிப்பு- போட்டியாளர்கள் கலந்து கொள்ள ஆட்சியர் அழைப்பு.!


இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்.. :-

இந்தியத் தேர்தல் ஆணையத்தால் ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக 2022-ஆம் ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, "எனது வாக்கு எனது எதிர்காலம் - ஒரு வாக்கின் வலிமை" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தேசிய வாக்காளர் விழிப்புணர்வுப் போட்டிகள் ஜனவரி, 2022 மாதம் 25 ம் நாள் தொடங்கி தேசிய அளவில் வினாடி வினா, பாட்டுப்போட்டி, காணொலி தயாரித்தல், சுவரொட்டி/விளம்பர படம் வடிவமைப்பு மற்றும் வாசகம் எழுதுதல் போட்டி ஆகிய 5 தலைப்புகளில் நடந்து வருகிறது.

இப்போட்டிகளில் அமெச்சூர் போட்டியாளர், தொழில்முறை போட்டியாளர் மற்றும் நிறுவனம் சார்ந்த போட்டியாளர் ஆகிய மூன்று பிரிவுகளின் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம், பள்ளி மற்றும் கல்லூரியினை சார்ந்த மாணவ மாணவியர் நிறுவனம் சார்ந்த போட்டியாளர்கள் என்ற பிரிவின் கீழ் பங்கேற்கலாம்.

பாட்டுப் போட்டி, காணொலிக் காட்சி உருவாக்கும் போட்டி மற்றும் விளம்பரப் படம் வடிவமைப்பு போட்டி ஆகியவை நிறுவனம் சார்ந்த நபர்கள், தொழில் சார்ந்தவர் மற்றும் தொழில் சாராதவர் ஆகிய மூன்று பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

அதுமட்டுமின்றி, ஒவ்வொரு பிரிவிலும் குறிப்பிடத்தக்க சிறப்புப் பிரிவின் கீழ் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். நிறுவனம் சார்ந்த நபர்கள் என்ற பிரிவில் 4 சிறப்புப் பரிசுகளும், தொழில் சார்ந்தவர் மற்றும் தொழில் சாராதவர் என்ற பிரிவில் தலா 3 சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படும். வினாடி வினாப் போட்டி வெற்றியாளர்களுக்கு ஊக்கப் பரிசாக இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பரிசுப்பொருள் மற்றும் அடையாள வில்லை வழங்கப்படும். பங்கேற்பாளர்கள் அனைவரும், போட்டியின் மூன்று நிலைகளை நிறைவு செய்ததன் பேரில் மின்னணு சான்றிதழ் வழங்கப்படும்.

மேற்கண்ட போட்டிகள் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச், 2022 மாதம் 31 ம் நாள்வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. போட்டி தொடர்பான அனைத்து பதிவுகளும் பங்கேற்பாளர்களின் விவரங்களுடன் இணைத்து, மார்ச் 31, 2022 ஆம் தேதிக்குள் voter-contest@eci.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். 

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் இப்போட்டிகளில் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என மாவட்டதேர்தல் அலுவலர் மற்றும் மாவட்டஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post