தனுஸ்கோடி முதல் தலைமன்னார், மீண்டும் அங்கிருந்து தனுஸ்கோடி வரை இரு வழி பாக் ஜலசந்தி கடல் பகுதியை 19 மணிநேரம் 45 நிமிடத்தில் நீந்தி கடந்து சிறுவன் சாதனை:

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் நீதிராஜன். அனுசர. இவர்களது மகன் சினேகன் (வயது14). சிறுவன் சினேகன் 2019 ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.அதே போல் கர்நாடக மாநிலம் தொன்னுரில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வெங்கல பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த சினேகன் முதன் முறையாக தனுஸ்கோடி முதல் தலைமன்னார் பின்னர் அங்கிருந்து மீண்டும் தனுஸ்கோடி வரை இரு வழி நீந்தி கடக்க முயற்சி செய்து 19 மணி நேரம் 45 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.கடலில் நீந்தி வந்த சிறுவன் சினேகனை மண்டபம் கடலோரா காவல் படை கமெண்டர் நாகேந்திரன் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற சிறுவனை வாழ்த்தினார். இவர்களுக்கு உதவியாக இலங்கை கடற்படையின் ரோந்து படகு சர்வதேச எல்லை வரையிலும், இந்திய கடற்பகுதியில் மெரைன் காவல்துறை மற்றும் இந்நிய கடலோர காவல்படையின் ஹொவர் கிராஃட் கப்பலும் பாதுகாப்பினை வழங்கினர்.
Previous Post Next Post