பல லட்சம் கோடி பங்குச் சந்தை ஊழல் -சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்.!

 

தேசிய பங்குச்சந்தையில் முறைகேடு செய்து பல லட்சம் ஊழல் வழக்கில் கைதான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

சிறையில் வீட்டு உணவை அனுமதிக்க கோரியதை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்றம், வழிபாடு தொடர்பான நூல்களை கொண்டு செல்ல சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு அனுமதி அளித்தது

கோ லொகேஷன் முறைகேடு செய்து பல லட்சம் கோடி ஊழல் வழக்கில், தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சித்ரா ராமகிருஷ்ணா , சிறையில் சில வசதிகள் கோரிய அவரது கோரிக்கையை நிராகரித்து, தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை 14 நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியது. 

சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகர்வால், அடுத்த மார்ச் 28-ம் தேதி ராமகிருஷ்ணாவை நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்த உத்தரவிட்டார்,


Ahamed

Senior Journalist

Previous Post Next Post