நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ. 1,000 கோடி விடுவிப்பு - அமைச்சர் ஐ. பெரியசாமி சட்டசபையில் தகவல்


சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி நேரம்  நடைபெற்று வருகின்றன.

இன்று காலை அமைச்சர் ஐ. பெரியசாமி சட்டசபையில் பேசும் போது கூறியதாவது:-

தமிழகத்தில் பொது நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ. 1,000 கோடி நேற்று ஒரே நாளில் விடுவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 5,48,000 நகைக் கடன்கள் தள்ளுபடி செய்து ரசீது தரப்பட்டுள்ளன.

மார்ச் 31ஆம் தேதிக்குள் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறியிருந்தேன். ஆனால், 3 நாள்கள் முன்னதாக மார்ச் 28ஆம் தேதியே அனைவருக்கும் தள்ளுபடி ரசீதுகள் தரப்படும் என நம்புகிறேன்” என கூறினார்.

Previous Post Next Post