ஈரோட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு


மக்கள் நீதி மய்ய ஈரோடு வடகிழக்கு மாவட்ட நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு...,

மக்கள் நீதி மய்யம் கட்சி கோபிசெட்டிபாளையம் மற்றும் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் முதல்கட்டமாக அறிவித்தார். அதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் ஜி.சி.சிவக்குமார் வேட்பாளர்களின் பட்டியிலை செய்தியாளர்களிடம் காண்பித்தார்.

 அதன் விவரம் வருமாறு. கோபி நகராட்சியில் 1வது வார்டு எஸ்.சத்தியமூர்த்தி. 2வது வார்டுதாரா பேகம், 4வது வார்டு எம்.திலகா, 8வது வார்டு வி.பிரதீப்குமார், 9வது வார்டு சி.மணிகண்டன், 10 வது வார்டு ஜெ.டோனி. 12 வது வார்டு என்.கே.சக்தி, 15 வது வார்டு பி.சதீஸ்குமார், 22வது வார்டு ஜி.பி.கார்த்திகேயன், 23 வது வார்டு ஜி.எஸ்.தீபா,

26 வது வார்டு எ.தங்கராஜ், 27வது வார்டு கே.பி.மணிகண்டன், 30 வது வார்டு எ.அமுதா, லக்கம்பட்டி பேருராட்சி 2வது வார்டு ஆர்.கோகிலா, 13 வது வார்டு பி.குணசேகரன், நம்பியூர் பேரூராட்சி 10வது வார்டு ஆர். பனிமலர், சத்தியமங்கலம் நகராட்சி 4வது வார்டு என். விக்னேஷ், 23 வது வார்டு மாணிக்கம். 26 வது வார்டு எம்.பிரகாஷ்,27 வது வார்டு எம்.பழனிவேல், புஞ்சைபுளியம்பட்டி நகரம் 12வது வார்டு ஜெ.பிரபாகரன் ஆகியோர் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களாக களம் காண்கிறார்கள் என்றனர்

Previous Post Next Post