கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்று அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்த பாஜக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் கடந்த முறை மழை வெள்ளத்தின் போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் என்றால் ஒரு ஹெக்டேருக்கு 71 ஆயிரத்து 400 ரூபாய் என்ற நிலையில் தற்போது ஒரு ஹேக்டேருக்கு 20ஆயிரம் ரூபாய் என்பது மிக குறைவு என்றார்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளை நண்பர்களாக பார்த்த திமுக தற்போது இவ்வளவு குறைவான தொகையை அறிவித்துள்ளது. விவசாயிகளிடம் ஏமாற்றத்தை உருவாகியுள்ளது. எனவே இந்த நிவாரண உதவியை கூடுதலாக வழங்க வேண்டும்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்ற பாஜக கோரிக்கைக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய அரசிடம் இருந்து பணம் வாங்கி வாருங்கள் என்று கூறுகிறார். இது, ஒரு பொறுப்புள்ள அமைச்சர் பேசும் பேச்சு அல்ல. மத்திய அரசு 2020-21 ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு வழங்கக்கூடிய பேரிடர் நிதி 300 கோடி ரூபாய் முழுமையாக வழங்கியுள்ளது.
ஸ்ரீரங்கம் கோவிலில் கருத்தியல் மண்டபத்தில் அமர்ந்து இன்னொருவர் சொற்பொழிவை கேட்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. பிரதமர் மோடியின் உரை ஒளிபரப்பான ஆனது சம்பந்தமாக அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடர்வது சரியல்ல தைரியம் இருந்தால் என் மீது வழக்கு தொடரப்படும்
தமிழக அரசு தூர்வாரும் பணியில் 2000 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் 600 கிலோ மீட்டர் மட்டுமே தூர்வாரும் பணி நடத்தியுள்ளது ஏன் என கேள்வி எழுப்பிய அவர்...
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 5ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 19ஆம் தேதி 11 மாவட்டங்களில் பாஜக முழுநேர போராட்டம் நடத்த உள்ளது என்று கூறினார்.