கோவை ஶ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் உலக புற்றுநோய் தினம் 2024 அனுசரிப்பு புற்று நோய்கள் குறித்த தகவல்கள் அடங்கிய டைனமிக் QR குறியீடு மற்றும் பெண்களுக்கான ஒரு வருட இலவச மேமோகிராம் சிகிச்சை திட்டம் அறிமுகம்*

*ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை - ஶ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் உலக புற்றுநோய் தினம் 2024 அனுசரிப்பு*
*புற்று நோய்கள் குறித்த பல தகவல்கள் அடங்கிய டைனமிக் QR குறியீடு மற்றும் பெண்களுக்கான ஒரு வருட இலவச மேமோகிராம் சிகிச்சை திட்டம் அறிமுகம்*

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை - ஶ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் உலக புற்றுநோய் தினம் 2024  அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை - ஶ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் டைனமிக் க்யூஆர் குறியீடுகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முழுமையான புற்றுநோய் விழிப்புணர்வுத் தகவல்களுடன், பெண்களுக்கான ஒரு வருட கால இலவச மேமோகிராம் ஸ்கிரீனிங் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வெளியீட்டு விழா மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஸ்ரீமதி வேலுமணியம்மாள் நினைவு மண்டபத்தில் நடைபெற்றது. எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி சி.வி.ராம்குமார் தலைமை வகித்தார். ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோயியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர்.பி.குகன் வரவேற்புரை வழங்கினார்.
காவல்துறை மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி அவர்கள்,  ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை - ஶ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இரண்டு பயனுள்ள முயற்சிகளையும் தொடங்கி வைத்து வாழ்த்து தெரிவித்தார்.
ஶ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் P.குகன் பேசுகையில்:-
இந்தியாவில் 2022க்குப் பிறகு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.67 லட்சமாக உள்ளது. பெண்களில், மார்பகப் புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோயாகக் காணப்படுகிறது. அதே போல் ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் பொதுவாக காணப்படுகிறது.
கருத்து கணிப்புகளின் படி, ஒவ்வொரு 22 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் வரக்கூடும் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பெண்கள் தங்கள் மார்பகங்களில் ஏதேனும் சிறிதளவு வித்தியாசத்தைக் கண்டால், மருத்துவ நிபுணருடன் கலந்து ஆலோசித்து சரியான பரிசோதனைகள் மூலம் எதனால் எந்த மாற்றம் என்பதைவும் இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தேவையான மருத்துவ வழிகாட்டுதல் மற்றும் முன்னெச்சரிக்கையுடன்  இருந்தால் பெண்கள் மார்பக புற்றுநோயை வெல்ல முடியும்.
துரதிருஷ்டவசமாக, பெரும்பாலான பெண்கள் பயம் அல்லது தயக்கம் காரணமாக மருத்துவரை அணுகுவதில்லை. இதனால்  மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள்  50% பேர் முற்றிய நிலைகளுடன் வருகிறார்கள். மார்பக புற்றுநோயின் இத்தகைய நிலைகளில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியும் ஆனால் புற்றுநோயிலிருந்து அவர்களை முழுமையாக காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
ஆண்களில், நுரையீரல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், வாய்வழி குழி புற்றுநோய், தொண்டை புற்றுநோய் போன்றவற்றிற்கு  முக்கியமாக காரணம்  புகையிலை மற்றும் ஆல்கஹால் பயன்பாடாகும். புகையிலை பயன்பாட்டை தவிர்த்தால் ,  60% புற்றுநோய் பாதிப்புகளைக் குறைக்கலாம்.
இந்தியாவில், குறிப்பாக கிராமப்புறங்களில் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், நம் நாட்டில் புற்றுநோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
ஶ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம்  தொடக்கத்தில் இருந்து கோவை மற்றும் அதன் சுற்றுப்புற  பகுதிகளில் உள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் பல்வேறு புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
"பல ஆண்டுகளாக எண்ணற்ற டிஜிட்டல் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் . புற்றுநோய் விழிப்புணர்வு ஆடியோக்கள், அனிமேஷன் வீடியோக்கள், மின் புத்தகங்கள், இணையதளங்கள், ஃபிளிப் புக்ஸ் போன்றவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தினோம். இவை அனைத்து புற்றுநோய்களையும், அவற்றின் வகைகள், காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள் போன்றவற்றை  அனைவரும் பற்றி எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் உருவாக்கி இருந்தோம்.
இந்த ஆண்டும் , எங்களின் விரிவான புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த அனைத்தையும் ஒரே தளத்தின் கீழ்  கொண்டு வந்துள்ளோம். இன்று நாங்கள் அறிமுகப்படுத்திய டைனமிக் க்யூ ஆர் குறியீட்டை எந்தவித கட்டணமும் இன்றி ஸ்கேன் செய்து புற்றுநோய் குறித்த அனைத்து தகவல்களையும் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் ஆடியோ , வீடியோ முறையில் பெறமுடியும்.
“மேலும், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்யலாம். மேமோகிராம் ஸ்கிரீனிங் தேவைப்படுபவர்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாகப் பெறலாம்.
"புற்றுநோய் பற்றிய அதிக விழிப்புணர்வை உருவாக்க தொடர்ந்து இது மாதிரியான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்கிறோம்" என்று டாக்டர் குஹான் கூறினார்.
நிகழ்வின் இறுதியில் ஶ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் K.கார்த்திகேஷ் நன்றியுரை வழங்கினார்.
Previous Post Next Post